புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சமூகச் சேவைகள்

11 மார்ச், 2011

சமூகச் சேவைகள்

இயற்கைச் சீற்றங்களால் மக்கள் பாதிக்கப்படும் போது மக்களுக்கு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளுதல். மக்களின் தேவைகள் அறிந்து அவர்களுக்கு உதவுதல் மற்றும் தேவையான முகாம்கள் ஏற்பாடு செய்தல் போன்றவற்றை பாப்புலர் ஃப்ரண்ட் செயல்வீரர்கள் சிறப்புடன் செய்து வருகின்றனர்.

நம்முடைய சமூகச் சேவைகளில் சில....

சுனாமி, வெள்ளப்பெருக்கு, கட்டிட இடிபாடுகள் போன்ற காலங்களில் சிறப்புடன் செயல்பட்டு நிவாரணப் பணிகளை மேற்கொண்டுள்ளோம்.

சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நாகப்பட்டிணத்திலும், குளச்சலிலும் பேரிடர் பாதுகாப்பு மையங்கள் நிறுவியுள்ளோம்.

சுகாதாரம் :

"ஆரோக்கியமான் மக்கள், வலிமையான தேசம்" 
HEALTHY PEOPLE HEALTHY NATION

நமது இந்தியாவில் மக்களின் ஆரோக்கியம் என்பது அபாயகரமாக உள்ளது. எனவே மக்களின் ஆரோக்கியத்தை வலியுறுத்தி "ஆரோக்கியமான மக்கள் - வலிமையான தேசம்" என்ற அடிப்படையில் கடந்த 2009 டிசம்பர் 1 முதல் 15 வரை தேசிய அளவிலான பிரச்சாரத்தை மேற்கொண்டோம். இப்பிரச்சாரத்தில் மாநில மற்றும் மாவட்ட அளவிலான கூட்டங்கள், யோகா பயிற்சி வகுப்புகள், தொடர் ஓட்டம், சிலம்பம், கராத்தே, ஜூடோ, விளையாட்டுப் போட்டிகள் என விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து மக்களின் ஆரோக்கியத்திற்காக அருந்தொண்டாற்றினோம்.
 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010