2008 மாலிகான் வெடிகுண்டு வழக்கை NIA விடம் மத்திய அரசு ஒப்படைத்த பின்பும் தீவிரவாத எதிர்ப்பு படை குண்டு வெடிப்பு வழக்கில் கைது செய்யப்ட்ட பிரவீன் முத்தாலிக் மீது கூடுதல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

இந்த குற்றப்பத்திரிகை சில RSS உறுப்பினர்கள் முத்தாலிக்கிற்கு எதிரான சிந்தனையுடையவர்கள் என்று குறிப்பிடுவதன் மூலம் RSS ல் பல உறுப்பினர்கள் ஹிந்து ராஷ்ட்ரா அமைத்திட வேண்டும் என்ற இலக்கோடு செயல்படுவதை நிரூபிக்கிறது. இத்தகைய ஜனநாயக மற்றும் தேச விரோத கொள்கையை கொண்ட அமைப்பிற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க அரசு தயக்கம் காட்டி வருவது பொது மக்களிடையே அதிர்ப்தி நிகழ்கிறது. மேலும் தீவிரவாதிகள் போன்ஸ்லா ராணுவ பள்ளியில் வெடிகுண்டுகள் தயாரிக்க கற்றுள்ளார்கள். இத்தகைய பள்ளி மீது அரசு எந்த அளவிற்கு கவனம் செலுத்துகிறது என்பதும் கேள்விக்குறியே. மேலும் NIA வழக்கை விசாரித்து வரும் வேளையில் தீவிரவாத எதிர்ப்பு படை அவசர கதியில் ஒரு கூடுதல் குற்றப்பத்திரி
கை தாக்கல் செய்வது இந்த குண்டு வெடிப்பில் சம்பந்தப்பட்ட ஆழமான விஷயங்களை வெளியே கொண்டு வர தடையாக இருக்கும் என்று மக்கள் கருத காரணமாக உள்ளது.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக