சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட மாதாந்திர செயற்குழு கூட்டம் 15.7.2011 காலை மாவட்ட தலைவர் P. முஹம்மது ஹுசைன் தலைமையில் அண்ணா நகரில் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் S. முஹம்மது ஸாலிஹ் வரவேற்புரையாற்றினார். அதில் 17.7.2011 அன்று மைலாப்பூர் தொகுதிக்கு உட்பட்ட பட்டினப்பாக்கத்தில் நடைபெற இருக்கும் தலைமைத்துவ பயிற்சி முகாமை சிறப்புற நடத்துவது எனவும், கடந்த வாரத்தில் ராணுவ அதிகாரியால் கொல்லப்பட்ட சிறுவன் தில்சான் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்து கொண்டது. மேலும் சிறிது காலம் அமைதியாய் இருந்த வெடிகுண்டு கலாச்சாரம் மறுபடியும் தலை தூக்குவதை கண்டிக்கும் விதமாகவும், உண்மை குற்றவாளிகளை அதற்குரிய கோணத்தில் விசாரித்து நடவடிக்கை எடுக்க கோரியும் ஒரு மாபெரும் பொதுக்கூட்டத்தை தி நகரில் இந்த மாத இறுதியில் நடத்துவது எனவும் முடிவெடுக்கப்பட்டது.
இந்த செயற்குழு கூட்டத்தில் மாவட்ட பொருளாளர் அஹமது ரிபாய், தொகுதி தலைவர்கள் அஹமது அலி, ஜுனைத் அன்சாரி, மீரான் உமர் ஷரிப், முஹம்மது அனீஸ், தொகுதி செயலாளர்கள் சாகுல் ஹமீது, அபூபக்கர் சித்திக், முஹம்மது சலீம், அப்துல் மஜீத் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
S. முஹம்மது ஸாலிஹ்
தென் சென்னை மாவட்ட செயலாளர்
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக