கோவை: நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக 7 ஆண்டுகள் கழித்த முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் கோவையில் நடைபெற்றது. ஜூன் 24 மாலை 3 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் இந்தியாவின் தமிழக தலைவர் ஏ.எஸ் இஸ்மாயில் துவக்க உரை நிகழ்த்தி கொடி அசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.
நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்டின் மாநில தலைவர் ஃபாத்திமா ஆலிமா அவர்களது தலைமையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பேரணியில் கலந்து கொண்டனர்.
இப்போராட்டத்தில் என்.சி.ஹெச். ஆர்.ஓவின் மாநில தலைவரும் வழக்கறிஞருமான பவானி பா.மோகன் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக