புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

தேவதானப்பட்டியில் இரத்ததான முகாம்

18 ஜூன், 2012

தேனி: தேவதானப்பட்டியில் பாப்புலர் ஃப்ரண்ட் பிளட் டொனேட் ஃபாரம் மற்றும் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து இரத்ததான முகாமை நடத்தியது. இதில் சமூக மேம்பாட்டுத்துறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் எம். சாந்த் முஹம்மது தலைமை தாங்கினார். பெரியகுளம் நகர தலைவர் மல்கர் சாதிக் வரவேற்புரை நிகழ்த்தினார். தேவதானப்பட்டி முஸ்லிம் ஜமாத் தலைவர் எம். கஃபார் கான், தேனி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட துணைச்செயலாளர் சசி தமிழ் பாண்டியன் ஆகியோர் வாழ்த்துறை வழங்கினர்.



தேவதானப்பட்டி பேரூராட்சி தலைவர் க.குணசேகரன் முகாமை தொடங்கி வைத்தார். இம் முகாமில் எஸ்.டி.பி.ஐயின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள், செய்யது ஆசிக், என். அக்பர் அலி, பெரியகுளம் நகர எஸ்.டி.பி.ஐ தலைவர் ஹக்கீம், தேவதானப்பட்டி நகர தலைவர் ஜாஹிர் ஹுஸைன் மற்றும் பாப்புலர் ஃப்ரண்ட்  உறுப்பினர்கல், எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள் கலந்து கொண்டனர். இம் முகாமிற்கான ஏற்பாடுகளை தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இரத்த வங்கி மருத்துவர் ஜெயச்சந்திரன் மற்றும் குழுவினர்கள், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகள் ஆகியோர் ஈடுபட்டனர்.





0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010