புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சென்னை மண்ணடியில் எஸ்.டி.பி.ஐயின் மகத்தான சேவை

2 பிப்ரவரி, 2012

சென்னை: சென்னையில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் மண்ணடியும் ஒன்று. மேலும் மண்ணடியில் தெரு ஓரம் வாழும் மக்களும் அதிகம். குறிப்பாக மண்ணடி அங்கப்பன் தெருவில் அமைந்துள்ள மஸ்ஜிதே அஷ்ரஃப் அருகே ஒரு பெரும் கூட்டம் வசித்து வருகிறது.


தெருவோரத்திலேயே படுத்து தூங்குவது, ஆண்களாக இருந்தால் அறை நிர்வாணத்துடன் குழிப்பது போன்ற சங்கடத்தை ஏற்படுத்தக்கூடிய பல செயல்கள் இங்கே தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டு தான் இருக்கிறது. அரசாங்கம் இங்கே வசிப்பவர்களுக்கு இலவசமாக வீடுகள் கொடுத்துள்ளது என்ற பேச்சு இருந்தாலும் பெரும்பாலானவர்களுக்கு வீடுகள் கிடைக்கவில்லை என்று கூறுகின்றனர். ஆனால் சமீபத்தில் ஒரு கணக்கெடுப்பை பார்த்த போது நமக்கு பெரிதும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. காரணம் அவர்கள் அனைவருக்கும் ரேஷன் கார்டு இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் அஷ்ரஃப் பள்ளியின் விலாசத்திலேயெ ஒருவர் ரேஷன் கார்டு வைத்திருக்கிறார் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். இப்படி இவர்களின் அந்த தெருவையே அசுத்தமாக்கிக்கொண்டு இருக்கிறார்கள்.

இவர்கள் அனைவரையும் இந்த இடத்தைவிட்டு காலி செய்து விட வேண்டும் என்ற நோக்கம் அல்லாமல் பிறருக்கு இடைஞ்சலை ஏற்படுத்தாதவாறு பணிகளை செய்ய வேண்டும் என்ற அடிப்படையில் கட்டிடக்காரர்களின் கோரிக்கையை ஏற்று ஒரு சில இடங்களிலிருந்து அவர்களை அப்புறப்படுத்தி இடத்தை சுத்தம் செய்து வருகிறது எஸ்.டி.பி.ஐ.


அந்த வகையில் மண்ணடி அஷ்ரஃப் பள்ளி அருகே இருந்த ஒரு இடத்தை சுத்தம் செய்து தூய்மைப்படுத்தும் பணியை சமீபத்தில் எஸ்.டி.பி.ஐ மேற்கொண்டது. துறைமுகம் தொகுதி தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமையில் அப்பகுதி நிர்வாகிகள் உட்பட அனைவரும் இப்பணியில் ஈடுபட்டு இடத்தை தூய்மை செய்திருக்கிறார்கள். இத்தகைய செயல்கள் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பை பெற்றுள்ளது. காரணம் இத்தகைய செயல்களை செய்ய வேண்டியது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாமன்ற உறுப்பினர்களின் வேலை. ஆனால் வழக்கம் போல் ஓட்டு கேட்பதற்கு மட்டுமே ரோட்டில் இறங்கும் அரசியல்வாதிகள் தான் இருக்கிறார்கள். மக்களுக்காக சேவை செய்யக்கூடிய அரசியல்வாதிகளை வலை வீசி தேடினாலும் கிடைப்பது கடினம்தான்.






1 விமர்சனங்கள்:

Ameer சொன்னது…

தங்களது பொதுசேவைக்கு வாழ்த்துகள். இதுபோன்ற சேவைகளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டர்களுக்கு பாதுகாப்பு கவசங்கள் கொடுக்கப்பட வேண்டும். படத்தில் அசுத்தங்களை அப்புறப்படுத்தும் தொண்டர் செருப்பு மட்டுமே அணிந்துள்ளார். அவர்களுக்கு சூ,க்ளவ்ஸ்,பேஸ் மாஸ்க் போன்றவை கொடுக்கப்பட வேண்டும். பொது நலனில் அக்கறை கொள்ளும் SDPI தொண்டரின் நலனிலும் அக்கறை கொள்ளவேண்டுமென அன்பாய் வேண்டுகிறேன்.

அமீர் சுல்தான்

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010