
தேசிய அளவில் உயர்ந்த பதவியில் இருப்பவரும் பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழிக்கவேண்டியவராகவும் இருக்க வேண்டியவரிடமிருந்து பிரச்சனைகளை ஏற்படுத்துபவர்களுக்கு சாதகமாக அறிக்கை வந்துள்ளது. பெண்கள் ஒரு சுய கவுரவத்துடனும் கண்ணியத்திற்குரிய மனநிலையுடன் வாழவேண்டியவள். இதை சிதைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்றுக்கொள்ளமுடியாது. இவ்வகையில் மம்தா ஷர்மா போன்றவர்கள் பெண்ணிணத்திற்கே ஒரு சாபக்கேடு தான் என்று நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் அறிக்கை விடுத்துள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அனைத்து இயக்கங்களின் கருத்தை நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் வரவேற்கிறது.
நேஷனல் விமஸ் ஃப்ரண்டின் செயலக கூட்டம் தலைவர் சகோதரி ஷாஹிதா தஸ்னீம் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் லைலா ஷம்சுதீன், ஏ.எஸ். ஜைனபா, ஃபரீதா அஷ்ரஃப் ஆகியோர் உரையாற்றினார்கள்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக