சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்டம் சார்பாக
மாவட்டம் முழுவதும் பல்வேறு இடங்களில் பள்ளி செல்வோம் விழிப்புணர்வு
பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. இப்பிரச்சாரத்தின் வாயிலாக ஏழை எளிய
மக்களுக்கு கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், பொருளாதார சிக்கல்
காரணமாக கல்வியை தொடர முடியாமல் இருக்கும் குழந்தைகளுக்கு உதவித்தொகை
வழங்குவதும், கல்வி உபகரணங்கள் வழங்கும் சேவையை பாப்புலர் ஃப்ரண்ட்
மேற்கொண்டு வருகிறது.
இந்தவகையில் பாலவாக்கம் கிளை சார்பாக ஏழை குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் விழா நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர்ரஹ்மான், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் குட்டி ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினர்.
இந்தவகையில் பாலவாக்கம் கிளை சார்பாக ஏழை குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் விழா நடைபெற்றது. இதில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சென்னை மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துர்ரஹ்மான், காஞ்சிபுரம் மாவட்ட தலைவர் குட்டி ஆகியோர் கலந்து கொண்டு உதவிகளை வழங்கினர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக