"புனே
சிறைச்சாலையில் ஒரு தீவிரவாதி கொல்லப்பட்டான்" என்ற தலைப்பில் கடந்த ஜூன்
8ஆம் தேதி அன்று தேசிய தொலைக்காட்சி ஒன்றில் பெருமையாக செய்தி
ஒளிபரப்பானது. குற்றம் சுமத்தப்பட்ட ஒருவர் முஸ்லிம் வாலிபர் சிறையில்
அடைக்கப்பட்டு 6 மாத காலமாகியும் இதுவரை அவர் மீது குற்றப்பத்திரிக்கை
தயார்படுத்தப்படவில்லை. இந்நிலையில் அவர் சிறைச்சாலையில்
கொல்லப்பட்டிருக்கிறார். இதனை தொடர்ந்து எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் அவர்
மீது தீவிரவாத முத்திரையை குத்தி செய்தி வெளியிட்டுள்ளது இந்திய தேசிய
தொலைக்காட்சி நிறுவனம். பின்னர் மறுநாளே இந்தியாவில் அதிகமாக் விற்கப்படும்
நாளிதழான "டைம்ஸ் ஆஃப் இந்தியா" பத்திரிக்கையில் "27 வயது தீவிரவாதி
கொல்லப்பட்டான்" என தலைப்பு செய்தி வெளியிட்டது. ஜெர்மன் பேக்கரி குண்டு
வழக்கு உட்பட பல வழக்குகளில் தேடப்பட்டு வரும் "யாசின் பட்கல்"
என்பவனுக்கும் கொலை செய்யப்பட்ட தீவிரவாதியான முஹம்மது கத்தீல்
சித்தீகிற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக நம்பப்படுவதாக செய்தி
வெளியிட்டது.
குற்றம் நீரூபனமாகாமல் குற்றம் சுமத்தப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை பற்றிய செய்திகள் இவ்வாறு நாளிதழ்களிலும், தொலைக்காட்சி செய்தி சேனல்களிலும் ஒளிப்பரப்பபடும்போது அதனை பார்க்கின்ற, படிக்கின்ற மக்களின் எதிர்வினை எவ்வாறு இருக்கும்? இதே செய்தியை "இங்கிலிஷ் டெய்லி" இணையதளத்தில் பதிவான போது, இது தொடர்பாக 280ற்கும் மேற்பட்ட கருத்துக்கள் பதிவாகியுள்ளது.
" இயற்கையான நீதி வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதியை கொன்றவர்கள் உண்மையான தேச பக்தி கொண்டவர்கள்."
"அனைத்து குற்றவாளிகளையும், தீவிரவாதிகளையும் ஒரே இடத்தில் அடைத்து வையுங்கள். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு மடிவார்கள். பிரச்சனை சுலபமாக முடிந்துவிடும்."
"இந்த வேலையை செய்தவர்கள் நாட்டிற்கு மிகப்பெரும் சேவையை செய்துள்ளனர்."
"இஸ்லாமிய தீவிரவாதியை கொன்ற குற்றவாளிகளுக்கு எனது பாராட்டுக்கள்!"
இவ்வாறு இணையதளங்களில் கருத்துக்கள் பதிவாகியுள்ளன.
குற்றம் நிரூபணம் ஆவதற்கு முன்பே அவரை தீவிரவாதி என்ற முத்திரையை
குத்தி விஷமத்தனமான செய்திகளை இந்திய ஊடகங்கள் வெளியிட்டதன் விளைவாகவே இது
போன்ற கருத்துக்கள் பதிவாகியுள்ளது. காவல்துறை அதிகாரிகள் சித்தீக்கை
சந்தேகத்தின் பெயரிலேயே கைது செய்தனர். அவர் மீது இதுவரை
குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படவுமில்லை, அவருக்கான விசாரணை
தொடங்கப்படவுமில்லை. ஆனால் பத்திரிக்கைகள் அனைத்தும் அவரை தீவிரவாதி என்று
செய்தி வெளியிட்டது. மேலும் காவல்துறையினரின் பாதுகாப்பில் இருக்க வேண்டிய
இடத்திலேயே இதர குற்றவாளிகளால் கழுத்து நெறிக்கப்பட்டு படுகொலை
செய்யப்பட்டுள்ளார்.
சித்தீக்கை கைது செய்து 6 மாதகாலமாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாதது காவல்துறையினர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குற்றம் சுமத்தப்பட்ட சித்தீக் மீது தகுந்த ஆதாரங்கள் கிடைக்காததால் திட்டமிட்டே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. சித்தீக்கின் குடும்பத்தினரை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கின்றது. ஒழுங்கான் கூரை அமைக்கப்படாத ஒரு வாடகை வீட்டில் தான் சித்தீக்கின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவரை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என குற்றம் சுமத்தப்பட்டு புனே காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சித்தீக்கின் படுகொலை பின்னனிக்கு என்ன காரணம் இருந்தாலும், அறைகுறை குற்றச்சாட்டுகளும், ஆதாரமற்ற வழக்குகளும் சித்தீக்கின் படுகொலைக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
மற்ற வழக்குகளை பொறுத்தவரை இந்தியாவில் செயல்படும் ஊடகங்கள்
காவல்துறையினர் வெளியிடும் அறிக்கைகளை ஒருபோதும் நம்ப தயாராக இருந்ததில்லை.
அதே சமயம் இஸ்லாமிய தீவிரவாதி என்ற நிலை வந்தவுடன் காவல்துறையினரின்
ஊதுகுழலாகவே ஊடகங்கள் செயல்பட தொடங்குகின்றன. முஸ்லிம் இளைஞர் ஒரு தீவிரவாத
முத்திரை குத்தப்பட்டு கைது செய்யப்பட்டுவிட்டால், அது உண்மைதானா என்பதை
கண்டறிய அந்த இளைஞன் வசிக்கும் பகுதிக்குச் சென்று உண்மை நிலையை கண்டறியவோ,
அல்லது ஆதாரப்பூர்வமான செய்திகள் கிடைக்கும் வரை காத்திருக்கவோ இந்த
ஊடகங்கள் தயாராக இல்லை. காவல்துறையினர் கூறுவது 100% உண்மை என்ற ரீதியில்
செய்திகளை வெளியிட்டு வருகின்றனர்.
கடந்த 2007ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் ஹனீஃப் ஆஸ்திரேலியாவில் தீவிரவாத சந்தேகத்திற்காக கைது செய்யப்பட்டபோது ஆஸ்திரேலியாவிலுள்ள ஊடகங்கள் அனைத்தும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தது. ஹனீஃபிற்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காத பட்சத்தில் தனது மன்னிப்பை பகிரங்கமாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் நஷ்ட ஈடும், தங்களது நாட்டிலேயே வசிப்பதற்காக குடியுரிமையும் வழங்கியது அந்நாட்டு அரசாங்கம். ஆனால் இதை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து டாக்டர் ஹனீஃபை தீவிரவாதியாகவே சித்தரித்து செய்திகளை வெளியிட்டு வந்தது இந்திய ஊடகங்கள்.
ஊடகங்களின் இந்த விஷமத்தனமான பிரச்சாரம் ஒரு அப்பாவி இளைஞனின் வாழ்க்கையையும், அவரது குடும்பத்தையும் எவ்வாறு சீரழிக்கிறது என்பதற்கு அமீர் கானின் சம்பவம் சிறந்த உதாரணம். அமீர் கான் என்ற முஸ்லிம் இளைஞர் தனது 16 வயதில் 1998ஆம் ஆண்டு பல குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 10 ஆண்டு சிறைவாசத்திற்கு பின்பு கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி அன்று தாஸ்னா சிறைச்சாலையிலிருந்து காஜியாபாத் மாவட்ட சிறப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். "தயினிக் ஜக்ரன்" என்ற ஹிந்தி நாளிதழ் அமீர் கான் தொடர்பாக கவர் ஸ்டோரி வெளியிட்டது. அதில் அமீர்கானை பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதி எனக்கூறியது. இந்த செய்தி பரபரப்பு அடைய விஷயம் தீவிரவாக இருக்கிறது என்று கூறி அமீர் கானிற்கு ஜாமின் வழங்க காஜியாபாத் நீதிபதி மறுத்துவிட்டார். அதன்பின்னர் தகுந்த ஆதாரங்கள் கிடைக்காததால் ஆமிர்கான கடந்த ஜனவரி 2012ல் தான் விடுதலை செய்யப்பட்டார். அவர் தீவிரவாதியும் அல்ல பாகிஸ்தானைச்சேர்ந்தவரும் அல்ல. ஆமீரின் குடும்பம் டெல்லியில் வசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"தி ஹிந்து" மற்றும் "என்.டி.டி.வி" போன்ற செய்தி நிறுவனங்கள் இந்தியாவில் சிறந்து விழங்கக்கூடிய பத்திரிகைகளாக கருதப்படுகிறது. ஆனால் முஸ்லிம்கள் என்ற நிலை வந்தவுடன் அவர்களுக்கும் மற்ற ஊடகங்களுக்கும் எவ்வித வித்யாசத்தையும் பார்க்க முடியவில்லை.
2007ஆம் ஆண்டு ஹிந்து பத்திரிக்கையின் ஆசிரியர் பிரவீன் சாமி
ஹைதராபாத்தில் கைது செய்யப்பட்ட அனைத்து முஸ்லிம் இளைஞர்களையும்
ஹர்கத்துல்-ஜிஹாதி-இஸ்லாமி அமைப்பைச்சேர்ந்த தீவிரவாதிகள் என்று தொடர்ந்து
செய்தி வெளியிட்டு வந்தார். மேலும் அவர்கள் தான் மக்கா மஸ்ஜித் மற்றும்
அஜ்மீர் குண்டுவெடிப்பிற்கு காரணம் என்று கூறினார். ஆனால் இதுதொடர்பாக
விசாரணை செய்த அதிகாரிகள் இக்குண்டுவெடிப்புகளுக்கு காரணம் ஹிந்த்துத்வா
அமைப்பான அபினவ் பாரத் என்ற உண்மைய கண்டுபிடித்தனர். மக்கா மஸ்ஜித்
குண்டுவெடிப்பு நிகழ்ந்தது மே 18, 2007ம் ஆண்டில். இது தொடர்பான விசாரணை
தொடங்குவதற்கு முன்பாகவே மே 23, 2007ல் இக்குண்டுவெடிப்பிற்கு காரணம்
இஸ்லாமிய தீவிரவதாதிகள் தான் என்று பிரவீன் சாமி செய்தி வெளியிட்டார்
என்பது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாத தாக்குதல்கள் தொடர்பாக செய்திகள் வெளியிடும்போது
ஊடகங்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். தாங்கள் பதிவு செய்தி வீடியோக்களை
அவர்கள் மீண்டு ஒரு முறை பார்வையிட வேண்டும். மாலேகான், ஹைதராபாத்,
அஜ்மீர், சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் போன்ற குண்டுவெடிப்பின் விசாரணை முடிவுகளை
உண்ணிப்பாக கவனிக்க வேண்டும். உளவுத்துறை மற்றும் காவல்துறையினரின்
ஊதுகுழலாக செயல்பட்டுவிடக்கூடாது.
சந்தேகமே இல்லை தற்போது எந்த ஒரு ஊடகமும் எழுச்சிக்காகவும், விழிப்புணர்வுக்காகவும் செயல்படுவதில்லை. மாறாக சம்பாதிக்கும் ஒரு துறையாகவே மாறிவிட்டது. தவறான செய்திகள் ஒரு குடும்பத்தினரை மட்டும் பாதிக்காமல் ஒட்டுமொத்த தேசத்தையும் பாதித்து வருகிறது. பல சமூக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி இனவாதத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு அதிகமாகவே இருக்கிறது.
ஒற்றுமையாக இருக்கும் தேசத்தை தீவிரவாதிகளால் ஒரு போதும் சிதைத்துவிட முடியாது. ஒற்றை சார்புடைய ஊடகங்கள் ஏற்படுத்தும் சேதத்தை விட தீவிரவாதிகளால் ஏற்படும் சேதம் மிகக்குறைவே. ஊடகத்துறையை நேர்மையான முறையில் நடத்தினால் இந்த தேசத்தை வளமான ஒரு தேசமாக மாற்ற முடியும்.
குற்றம் நீரூபனமாகாமல் குற்றம் சுமத்தப்பட்ட சிறையில் அடைக்கப்பட்ட ஒருவரை பற்றிய செய்திகள் இவ்வாறு நாளிதழ்களிலும், தொலைக்காட்சி செய்தி சேனல்களிலும் ஒளிப்பரப்பபடும்போது அதனை பார்க்கின்ற, படிக்கின்ற மக்களின் எதிர்வினை எவ்வாறு இருக்கும்? இதே செய்தியை "இங்கிலிஷ் டெய்லி" இணையதளத்தில் பதிவான போது, இது தொடர்பாக 280ற்கும் மேற்பட்ட கருத்துக்கள் பதிவாகியுள்ளது.
" இயற்கையான நீதி வழங்கப்பட்டுள்ளது. தீவிரவாதியை கொன்றவர்கள் உண்மையான தேச பக்தி கொண்டவர்கள்."
"அனைத்து குற்றவாளிகளையும், தீவிரவாதிகளையும் ஒரே இடத்தில் அடைத்து வையுங்கள். அதன் பின்னர் அவர்கள் அனைவரும் ஒன்றோடொன்று மோதிக்கொண்டு மடிவார்கள். பிரச்சனை சுலபமாக முடிந்துவிடும்."
"இந்த வேலையை செய்தவர்கள் நாட்டிற்கு மிகப்பெரும் சேவையை செய்துள்ளனர்."
"இஸ்லாமிய தீவிரவாதியை கொன்ற குற்றவாளிகளுக்கு எனது பாராட்டுக்கள்!"
இவ்வாறு இணையதளங்களில் கருத்துக்கள் பதிவாகியுள்ளன.
![]() |
ஹைதராபாத் மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பின் போது |
சித்தீக்கை கைது செய்து 6 மாதகாலமாகியும் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாதது காவல்துறையினர் மீது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. குற்றம் சுமத்தப்பட்ட சித்தீக் மீது தகுந்த ஆதாரங்கள் கிடைக்காததால் திட்டமிட்டே அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனவும் கருதப்படுகிறது. சித்தீக்கின் குடும்பத்தினரை பார்க்கும் போது மிகவும் பரிதாபமாக இருக்கின்றது. ஒழுங்கான் கூரை அமைக்கப்படாத ஒரு வாடகை வீட்டில் தான் சித்தீக்கின் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அவரை இந்தியன் முஜாஹிதீன் அமைப்பைச் சேர்ந்தவர் என குற்றம் சுமத்தப்பட்டு புனே காவல்துறை அதிகாரிகள் அவரை கைது செய்தனர். பின்னர் பாதுகாப்பாக இருக்க வேண்டிய சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார். சித்தீக்கின் படுகொலை பின்னனிக்கு என்ன காரணம் இருந்தாலும், அறைகுறை குற்றச்சாட்டுகளும், ஆதாரமற்ற வழக்குகளும் சித்தீக்கின் படுகொலைக்கு ஒரு காரணமாக அமைந்துவிட்டது.
![]() |
மக்கா மஸ்ஜித் குண்டுவெடிப்பில் தொடர்புபடுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளான டாக்டர் ஜுனைத் அலி இபுராஹிம், ரயிசுதீன் மற்றும் அப்துர்ரஹ்மான். |
கடந்த 2007ஆம் ஆண்டு பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் ஹனீஃப் ஆஸ்திரேலியாவில் தீவிரவாத சந்தேகத்திற்காக கைது செய்யப்பட்டபோது ஆஸ்திரேலியாவிலுள்ள ஊடகங்கள் அனைத்தும் அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்தது. ஹனீஃபிற்கு எதிராக எந்த ஒரு ஆதாரமும் கிடைக்காத பட்சத்தில் தனது மன்னிப்பை பகிரங்கமாக அறிவித்ததோடு மட்டுமல்லாமல் நஷ்ட ஈடும், தங்களது நாட்டிலேயே வசிப்பதற்காக குடியுரிமையும் வழங்கியது அந்நாட்டு அரசாங்கம். ஆனால் இதை முற்றிலுமாக இருட்டடிப்பு செய்து டாக்டர் ஹனீஃபை தீவிரவாதியாகவே சித்தரித்து செய்திகளை வெளியிட்டு வந்தது இந்திய ஊடகங்கள்.
ஊடகங்களின் இந்த விஷமத்தனமான பிரச்சாரம் ஒரு அப்பாவி இளைஞனின் வாழ்க்கையையும், அவரது குடும்பத்தையும் எவ்வாறு சீரழிக்கிறது என்பதற்கு அமீர் கானின் சம்பவம் சிறந்த உதாரணம். அமீர் கான் என்ற முஸ்லிம் இளைஞர் தனது 16 வயதில் 1998ஆம் ஆண்டு பல குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். 10 ஆண்டு சிறைவாசத்திற்கு பின்பு கடந்த 2007ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி அன்று தாஸ்னா சிறைச்சாலையிலிருந்து காஜியாபாத் மாவட்ட சிறப்பு நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டார். "தயினிக் ஜக்ரன்" என்ற ஹிந்தி நாளிதழ் அமீர் கான் தொடர்பாக கவர் ஸ்டோரி வெளியிட்டது. அதில் அமீர்கானை பாகிஸ்தான் நாட்டு தீவிரவாதி எனக்கூறியது. இந்த செய்தி பரபரப்பு அடைய விஷயம் தீவிரவாக இருக்கிறது என்று கூறி அமீர் கானிற்கு ஜாமின் வழங்க காஜியாபாத் நீதிபதி மறுத்துவிட்டார். அதன்பின்னர் தகுந்த ஆதாரங்கள் கிடைக்காததால் ஆமிர்கான கடந்த ஜனவரி 2012ல் தான் விடுதலை செய்யப்பட்டார். அவர் தீவிரவாதியும் அல்ல பாகிஸ்தானைச்சேர்ந்தவரும் அல்ல. ஆமீரின் குடும்பம் டெல்லியில் வசித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
"தி ஹிந்து" மற்றும் "என்.டி.டி.வி" போன்ற செய்தி நிறுவனங்கள் இந்தியாவில் சிறந்து விழங்கக்கூடிய பத்திரிகைகளாக கருதப்படுகிறது. ஆனால் முஸ்லிம்கள் என்ற நிலை வந்தவுடன் அவர்களுக்கும் மற்ற ஊடகங்களுக்கும் எவ்வித வித்யாசத்தையும் பார்க்க முடியவில்லை.
![]() |
மக்கா மஸ்ஜித், அஜ்மீர், மாலேகான், சம்ஜோத்தா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்புகளில் தொடர்புடைய உண்மை குற்றவாளியான ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிரவாதி சுவாமி அசிமானந்தா. |
![]() |
எந்த குற்றத்திலும் ஈடுபடாமல் குண்டுவெடிப்பு வழக்குகளில் சிக்கவைக்கப்படு 14 வருடங்களாக சிறையில் தண்டனை அனுபவித்து விடுதலையான ஆமீர்கான். |
சந்தேகமே இல்லை தற்போது எந்த ஒரு ஊடகமும் எழுச்சிக்காகவும், விழிப்புணர்வுக்காகவும் செயல்படுவதில்லை. மாறாக சம்பாதிக்கும் ஒரு துறையாகவே மாறிவிட்டது. தவறான செய்திகள் ஒரு குடும்பத்தினரை மட்டும் பாதிக்காமல் ஒட்டுமொத்த தேசத்தையும் பாதித்து வருகிறது. பல சமூக மக்களிடையே பிளவை ஏற்படுத்தி இனவாதத்தை ஏற்படுத்துவதில் ஊடகங்களின் பங்கு அதிகமாகவே இருக்கிறது.
ஒற்றுமையாக இருக்கும் தேசத்தை தீவிரவாதிகளால் ஒரு போதும் சிதைத்துவிட முடியாது. ஒற்றை சார்புடைய ஊடகங்கள் ஏற்படுத்தும் சேதத்தை விட தீவிரவாதிகளால் ஏற்படும் சேதம் மிகக்குறைவே. ஊடகத்துறையை நேர்மையான முறையில் நடத்தினால் இந்த தேசத்தை வளமான ஒரு தேசமாக மாற்ற முடியும்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக