சென்னை: எஸ்.டி.பி.ஐ
கட்சியின் 4ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு சென்னை மண்ணடி தம்புச்செட்டி
தெருவில் மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள்
வழங்கு விழா நடைபெற்றது. வடசென்னை மாவட்ட சார்பில் நடத்தப்பட்ட
இப்பொதுக்கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி, மாநில
பொதுச்செயலாளர் ரஃபீக் அஹமது, தென்சென்னை மாவட்ட தலைவர் பி.முஹம்மது
ஹுஸைன், வடசென்னை மாவட்ட தலைவர் எஸ்.அமீர் ஹம்ஜா ஆகியோர் சிறப்புரை
நிகழ்த்தினர்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 1லட்சம் ரூபாய் மதிப்பில் பொருளாதார வசதியற்ற குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, +2 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, மாற்றுத்திரனாளிகளுக்காக கைத்தடி, மூன்று சக்கர வண்டி, மூக்கு கண்ணாடி போன்ற உதவிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் வழங்கினர்.
மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் உரை நிகழ்த்தும் போது, எஸ்.டி.பி.ஐ கட்சி கடந்து வந்த பாதையையும், எஸ்.டி.பி.ஐயின் தற்போதையை செயல்பாடுகளையும் எடுத்துக்கூறினார். எஸ்.டி.பி.ஐ கட்சி இன்று மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், பல்வேறு கொள்கைகளை கொண்டவர்கள் கட்சியில் இணைந்து வருவதை சுட்டிக்காட்டினார். வடசென்னை மாவட்ட பொதுச்செய்லாளர் ரஷீத் அவர்கள் மாநில தலைவர் அவர்களுக்கு வீரவாள் பரிசாக வழங்கினார்.
முன்னதாக நிகழ்ச்சியை வடசென்னை மாவட்ட செயலாளர் நேதாஜி ஜமால் அவர்கள்
தொகுத்து வழங்கினார். துறைமுகம் தொகுதி தலைவர் எஸ். அமீர் சுல்தான் தலைமை
தாங்கினார். வடசென்னை மாவட்ட பொதுச்செயலாளர் ரஷீத் அவர்கள் வரவேற்புரை
நிகழ்த்தினார். இறுதியாக வடசென்னை மாவட்ட பொருளாளர் ராயல் கரீம் அவர்கள்
நன்றியுரை நிகழ்த்த கூட்டம் நிறைவுற்றது. நூற்றுக்கணக்கானவர்கள்
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் சுமார் 1லட்சம் ரூபாய் மதிப்பில் பொருளாதார வசதியற்ற குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, +2 மற்றும் 10ஆம் வகுப்பு தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குதல், தையல் இயந்திரம், இஸ்திரி பெட்டி, மாற்றுத்திரனாளிகளுக்காக கைத்தடி, மூன்று சக்கர வண்டி, மூக்கு கண்ணாடி போன்ற உதவிகளை எஸ்.டி.பி.ஐ. கட்சியின் நிர்வாகிகள் வழங்கினர்.
மாநிலத்தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் உரை நிகழ்த்தும் போது, எஸ்.டி.பி.ஐ கட்சி கடந்து வந்த பாதையையும், எஸ்.டி.பி.ஐயின் தற்போதையை செயல்பாடுகளையும் எடுத்துக்கூறினார். எஸ்.டி.பி.ஐ கட்சி இன்று மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும், பல்வேறு கொள்கைகளை கொண்டவர்கள் கட்சியில் இணைந்து வருவதை சுட்டிக்காட்டினார். வடசென்னை மாவட்ட பொதுச்செய்லாளர் ரஷீத் அவர்கள் மாநில தலைவர் அவர்களுக்கு வீரவாள் பரிசாக வழங்கினார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக