புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சித்தீக்கின் வழக்கை சிபிஐயிட ஒப்படைக்க வேண்டும்! - பாப்புலர் ஃப்ரண்ட்

21 ஜூன், 2012

புதுடெல்லி: சமீபத்தில் புனே ஏர்வாடா சிறைச்சாலையில் இன்னபிற சிறைவாசிகளால் கழுத்து நெறுத்து கொலை செய்யப்பட்ட சித்தீக்கின் சம்பவத்தை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய செயற்குழு கூட்டம் வன்மையாக கண்டிக்கிறது. சித்தீக் எதற்காக கைது செய்யப்பட்டார் என்ற மர்மத்தை மத்திய அரசின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் உடனே தெரிவிக்க வேண்டும். அதே போன்று சவூதி அரேபியாவில் கைது செய்யப்பட்ட முஸ்லிம் இளைஞரான ஃபாசிஸ் மெஹ்மூதின் நிலை என்ன என்பதனையும் தெரிவிக்க வேண்டும் என இக்குழு வலியுறுத்தியுள்ளது.

மஹாராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினரால் குண்டு வெடிப்பு வழக்குகளில் தொடர்புபடுத்தப்பட்டு புனே சிறைச்சாலையில் சித்தீக் அடைக்கப்பட்டார். அங்கு இன்னபிற குற்றவாளிகள் அவரை கொலை செய்துள்ளனர். காவல்துறையினரின் உடந்தை இல்லாமல் இவ்வாறான‌ கொலை செயல்கள் நடைபெறவியலாது. சித்தீக் அடைக்கப்பட்டிருந்த அறைக்குள் 200ற்கும் மேற்பட்ட குற்றவாளிகள் உள்ளே புகுந்து அவரை கொலை செய்திருப்பது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலை செய்யப்பட்டு இரண்டு நாட்கள் மேல் ஆகியும் இதுவரை இது தொடர்பாக மஹாராஷ்டிரா அரசாங்கம் மெளனம் சாதித்து வருகிறது. அவரை கொலை செய்ய பயன்படுத்திய ஆயுதங்களை இதுவரை காவல்துறையின் பறிமுதல் செய்யவில்லை என்ற செய்தியும் வந்துள்ளது.

சிறைச்சாலையில் படுகொலை செய்யப்பட்ட சித்தீக்

சித்தீக் உயிருடன் இருக்கும் போது தன்னை சந்திக்க வந்த தனது குடும்பத்தினரிடம் தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாக பலமுறை தெரிவித்திருக்கிறார். விசாரணை கைதிகளாக இருக்கும் பல முஸ்லிம் இளைஞர்கள் கூறும்போது காவல்துறையினர் யாரை கொலை செய்ய வேண்டுமென்று திட்டமிடுகிறார்களோ அவர்களை மற்ற குற்றவாளிகளை கொண்டே தாக்கி வருவதாக கூறியுள்ளனர்.

சித்தீக்கின் உடலை மீண்டும் ஒரு முறை பிரேத பரிசோதனை செய்ய வேண்டுமென்றும், இவ்வழக்கின் விசாரணையை சி.பி.ஐயிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும், இக்கொலை வழக்கில் தொடர்புடைய அனைத்து காவல்துறை அதிகாரிகளையும் பணி இடை நீக்கம் செய்ய வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்துகிறது. விசாரணை கைதிகளாக இருக்கும் முஸ்லிம் இளைஞர்களை அனைவரையும் உறுதி செய்யப்பட்ட தீவிரவாதிகளைப் போல் நடத்தும் போக்கினை மாற்றிக்கொள்ள வேண்டும்.

முஸ்லிம் இளைஞர்கள் கைதுசெய்யப்படுவதின் சமீபத்திய நிகழ்வாக ஃபாசிஸ் மெஹ்மூதின் சம்பவம் உதாரணமாக இருக்கிறது. எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் தீவிரவாதி என்ற முத்திரை முஸ்லிம் இளைஞர்கள் மீது சுமத்தப்பட்டு வருகிறது. மத்திய அரசின் புலனாய்வுத்துறை அதிகாரிகள் தங்களின் இந்த நிலைப்பாட்டை நிறுத்துவதாக தெரியவில்லை. அதே சமயம் நாட்டின் அமைதியை சீர்குழைத்து பல குண்டுவெடிப்புகளை நிகழ்த்திவரும் ஹிந்துத்துவ தீவிரவாத அமைப்புகளுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் இருந்த போதிலும் அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. ஆனால் முஸ்லிம் இளைஞன் விசாரணை என்கிற பெயரில் கைது செய்யப்பட்ட தீவிரவாத  வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு தொடர்ந்து பல்வேறு வழக்குகளை அவர்கள் மீது சுமத்தி ஜாமீன் கூட கிடைக்காதவாறு ஒரு சார்பாக செயல்பட்டு வருகிறது.

காவல்துறை மற்றும் புலனாய்வு அதிகாரிகளின் இந்த இரட்டை நிலையை குறித்து மக்களிடம் பிரச்சாரம் மேற்கொள்ள பாப்புலர் ஃப்ரண்டின் செயற்குழு முடிவெடுத்துள்ளது. மேலும் இந்தியா முழுவதும் நடைபெற்று வரும் ஸ்கூல் சலோ பிரச்சாரத்தை பற்றி பரீசீலனை செய்யப்பட்டது. தேசிய தலைவர் இ.எம். அப்துர் ரஹ்மான் இக்கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் அறிக்கைகளை சமர்பித்தார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010