புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

நரோடாபாட்டியா கூட்டுப்படுகொலை - முன்னால் பா.ஜ.க மந்திரிக்கு தண்டனை உறுதி

31 ஆகஸ்ட், 2012

அஹமதாபாத்: கடந்த 2002 குஜராத் மாநிலம் நரோடாபாட்டியாவில் நடைபெற்ற கூட்டுப்படுகொலை தொடர்பான விசாரணையின் தீர்ப்பை குஜராத் சிறப்பு நீதிமன்றம் வழங்கியது. அதில் பா.ஜ.க முன்னால் மந்திரி மாயாபென் கோத்னானி மற்றும் பஜ்ரங்தள் தலைவன் பாபுலால் பஜ்ரங்கி உட்பட 32 நபர்களுக்கு  தண்டனை வழங்குவதாக அறிவித்தது. இக்கூட்டுபடுகொலையில் 97 அப்பாவிகள் உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்டார்கள்.



இன்னும் பிற வழக்குகள் தொடர்பாக மற்றொரு 29 நபர்களுக்கும் சிறப்பு நீதிமன்றம் தண்டனை வழங்கியுள்ளது. குஜராத் இனப்படுகொலை வழக்கில் பா.ஜ.கவின் முன்னால் மந்திரி தண்டனைக்குள்ளாவது இதுவே முதல்முறை. குஜராத் சிறப்பு நீதிமன்றத்தின் இத்தீர்ப்பை வரவேற்கும் வகையில் "உண்மை வெற்றி பெற்றது" என சமூக ஆர்வளர் தீஸ்தா சேதல்வாத் கருத்து தெரிவித்துள்ளார்.
தண்டனை உறுதி செய்யப்பட்ட மாயா கோத்னானி உட்பட அனைவர் மீது இந்திய பீனல் கோடின் படி கொலை மற்றும் சதி ஆலோசனை ஆகிய வகுப்புகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

2002, பிபரவரி 27 ஆம் நாள் கோத்ராவில் இரயில் எரிப்பு சம்பவம் நடைபெற்ற மறுநாளே நரோடாபாட்டியாவில் கலவரம் வெடித்தது. இதில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என மொத்தம் 97 நபர்கள் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். அப்போது பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சராக இருந்த மாயா கோத்னானி கலவரக்காரர்களை தூண்டியதாக நீதிமன்றத்தில் சாட்சிகள் கூறப்பட்டது.

குஜராத் கலவர வழக்குகளை விசாரணை செய்வதற்காக உச்ச நீதிமன்றம் கடந்த 2009 ஆம் ஆண்டு சிறப்பு விசாரணைக்குழுவை ஏற்பாடு செய்திருந்தது.

பஜ்ரங்தள் அமைப்பின் தலைவன் பாபுலால் பஜ்ரங்கியும் நரோடா பாட்டியா மக்களை கொல்வதற்காக கலவரக்காரர்களை தூண்டியுள்ளான் என்பதும் உறுதி செய்யப்பட்டது. தெஹல்கா பத்திரிக்கையாளர் எடுத்த ரகசிய வீடியோ பதிவில் பாபுலால் பஜ்ரங்கியே இதனை உறுதி செய்துள்ளான்.
நரோடாபாட்டியா கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட 64 நபர்களில் 3 பேர் விசாரணை காலத்தின் போதே மரணித்துவிட்டனர். மீதமுள்ள 61 நபர்கள் மீது கொலை, தீ வைத்தல், கலகத்தை ஏற்படுத்துதல் போன்றவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் பெரும்பாளானவர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010