புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

வரவேற்க்கப்பட்ட நரோடாபாட்டியா கூட்டுப்படுகொலை தீர்ப்பு!

1 செப்டம்பர், 2012

 
2002 குஜராத் மாநிலம் நரோடாபாட்டியாவில் நடைபெற்ற கூட்டுப்படுகொலையின் குற்றவாளிகளின் குடும்பத்தார்கள் நூற்றிற்கும் அதிகமானோர் மேற்கு அஹமதாபாத்திலுள்ள குடும்ப நல சிறப்பு நீதிமன்றம் முன் அன்று மாலை சரியாக 3.50 மணியளவில் குழுமியிருந்தனர். சிறப்பு விசாரணை நீதிமன்றத்தின் நீதிபதி ஜோத்ஸனா யாக்னி நரோடாபாட்டியா கூட்டுப்படுகொலை தொடர்பான தனது தீர்ப்பை வாசித்து முடித்தார். அதில் முன்னால் பா.ஜ.க அமைச்சரான மாயாபென் கோத்னானிக்கு 18 வருட சிறை தண்டனையும், பஜ்ரங்தள் தலைவர் பாபு பஜ்ரங்கிக்கு சாகும்வரை சிறை தண்டனையும் இன்ன பிற 29 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்குவதாக தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை கேள்விப்பட்ட குற்றவாளிகளின் குடும்பத்தினர் கதறி அழுதனர். நீதிமன்ற வளாகத்திற்குள் பதட்டம் ஏற்பட அதிக அளவில் காவல்துறையினர் குவிக்கப்பட்டனர்.

எந்த தவறும் செய்யாத அப்பாவி பொதுமக்கள் 97 நபர்கள் நரோடாபாட்டியா கூட்டுப்படுகொலையில் கொடூரமாக கொல்லப்பட்டனர். 125ற்கும் அதிகமான மக்கள் படுகாயமுற்றனர். படுகொலை நடைபெற்று இவ்வளவு காலமாகியும் முறையான விசாரணை மற்றும் தீர்ப்பு வழங்கப்படாமல் இருந்ததால் கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மிகப்பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்கு பிறகு நடைபெற்ற இக்கலவரம் நன்கு திட்டமிடப்பட்டுள்ளது என நீதிபதி தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.

தீர்ப்பு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது:

தீர்ப்பு நாளன்று நரோடாபாட்டியா மக்கள் டிவி சேனல்கள் மூலமாக தீர்ப்பை கேட்டு மிகவும் சந்தோஷமடைந்தனர். ஒரு பெண் நீதிபதி இப்படியொறு நியாயமான தீர்ப்பை வழங்கியது குறித்து அவர்கள் மமகிழ்ச்சியளிப்பதாகவும், குற்றவாளிகளுக்கு எதிராக அதிக அளவில் பெண்களே சாட்சி கூறியுள்ளனர் என ஃபாத்திமா பீவி என்ற பெண் தெரிவித்தார். கொலை குற்றத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் அவர்களை தூண்டி கலவரத்தை ஏற்படுத்திய பெரும் புள்ளிகள் இன்னும் ஆட்சியில் தான் இருந்து கொண்டிருக்கிறார்கள் கமருன் நிஷா என்ற பெண் தெரிவித்தார். குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடியின் உண்ணாவிரத நாடகத்தை எதிர்த்து அமைதிப் பேரணி நடத்த முயன்ற நூறு பெண்களை காவல்துறையினர் கைது செய்தனர். அதில் தனது சகோதரியும் பங்கேற்றதாக கமருன் நிஷா தெரிவித்தார்.

பிப்ரவரி 28, 2002 அன்று கலவர சமயத்தில் காவல்துறையினர் நூறானி மஸ்ஜித் அருகே நின்று கொண்டிருந்தனர். அச்சமயம் கலவரக்காரர்களை எங்களை கடுமையாக தாக்கினர். அப்போது அதனை வேடிக்கை தான் பார்த்துக்கொண்டிருந்தனரே தவிற எங்களுக்கு உதவி செய்ய முன்வரவில்லை. நான் எனது 7 மற்றும் 15 வயது மகள்கள், தாய், மைத்துனி மற்றும் அவளது 10 வயது குழந்தையுடன் தப்பி ஓடி கங்கோதரி ஹவுஸிங்கில் ஒளிந்து கொண்டோம்.அங்கேயும் கலவரக்காரர்கள் வந்து தாக்குதல் நடத்தினர். என் மீது யாரோ ஒருவர் பெட்ரோலை ஊற்றினார். எனது 7 வயது மகள் ரேஷ்மாவின் கையை இரும்பு தடியால் அடித்து உடைத்தனர். என் மீது யாரோ ஒருவர் பெட்ரோலை ஊற்றினார். எனது 7 வயது மகள் ரேஷ்மாவின் கையை இரும்பு தடியால் அடித்து உடைத்தனர். எனது 15 வயது மகளை கற்பழித்து கத்தியால் குத்தினர். என்னுடைய உடம்பு முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. தரையில் உருண்டு அதனை அணைக்க முயற்ச்சித்தேன். இவ்வாறு ஃபர்ஜானா ஐயூப் கான் தெரிவித்தார்.

ஃபர்ஜானா போன்று நரோடாபாட்டியாவில் வசித்த நூற்றிற்கும் அதிகமான குடும்பங்கள் 7 மாதங்களுக்கு மேலாக ஷா ஆலமில் ஏற்படுத்தப்பட்ட நிவாரண முகாமில் தங்கியிருந்தனர்.

குஜராத் கலவரத்தில் நரோடாபாட்டியா மற்றும் குல்பர்க் ஆகிய பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நரோடாபாட்டியாவில் கொல்லப்பட்ட பெண் தான் கவுஸர் பானு. அவர் 9 மாத கற்பினி பெண்ணாக இருந்தார். கலவரக்காரர்களுக்கு ஆதரவாக செயல்பட்ட அரசாங்க அதிகாரிகள் மற்றும் வழக்கறிஞர்கள் அவளுக்கு ஏற்பட்ட சம்பவத்தை இட்டுக்கட்டப்பட்டது என்றும் அவ்வாறு ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை என்று மறுத்தனர். கவுஸர் பானுவின் வயிறு கத்தியால் குத்தப்பட்டதை எனது இரு கண்களாலும் நான் பார்த்தேன். அப்படியிருக்க இதனை எவ்வாறு அவர்கள் இட்டுக்கட்டப்பட்டது என கூறலாம்? என ஜன்னத் பீ என்ற பெண் கேள்வி எழுப்பியுள்ளார். குஜராத் கலவரம் தொடர்பாக தீர்ப்பு வெளியாவதை தொடர்ந்து பதட்ட நிலை ஏற்பட்டது. அசம்பாவித சம்பவம் ஏதும் நிகழ்ந்துவிடக்கூடும் என்ற எண்ணத்தில் பலரும் இரு நாட்களுக்கு முன்னரே தங்களுடைய வீட்டை பூட்டி வெளியூர் சென்று விட்டனர்.

அனுமெஹா யாதவ்
தி ஹிந்து

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010