புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சென்னையில் நடைபெற்ற பிரச்சாரப் பயிற்சி முகாம்.

29 ஆகஸ்ட், 2012

சென்னை : நாட்டில் சிறுபான்மை  சமூக அப்பாவி இளைஞர்களை குறிவைத்து கைது செய்வதும்  அவர்களை நீண்டகாலமாக  சிறைகளில் அடைத்து வைப்பதும் தொடர்கதையாகி வருகிறது. இதனை மக்கள் மன்றத்தில் வைக்கும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆகஸ்ட் 15 முதல் செப்டம்பர்  15  வரை சட்டப்படி பிணையில் விடு! அப்பாவிகளை விடுதலை செய்!! என்ற பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்த தீர்மானித்துள்ளது .
அந்த  பிரசாரத்தின் சென்னை  மண்டலத்திற்கான பேச்சாளர் பயிற்சி முகாம் சென்னையில் 27 .08 .2012 அன்று பாப்புலர் ஃப்ரண்ட் தலைமையகத்தில்  நடைபெற்றது. இந் நிகழ்ச்சி மற்றும் பயிற்சி  பாப்புலர் ஃப்ரண்ட் மாநில செயலாளர் முஹமது ஷேக் அன்சாரி தலைமையில் நடைபெற்றது. இதில் சென்னை மண்டலத்தை சேர்ந்த பல பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010