சென்னை: இன அழிப்புக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சார்பில் சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் மாலை 7 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சமுதாய தலைவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.
இந்திய அரசியலை பொருத்தவரை இருவகையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவை எழுதப்படாத சட்டம் மற்றும் பின்பற்றப்படக்கூடிய சட்டம். பெரும்பாலான சமயங்களில் முஸ்லிம்களுக்கு மட்டும் எழுதப்படாத சட்டமே நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளையொட்டி ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் தமிழக அரசு முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டுவருகிறது. தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஜெயா அராசாகட்டும் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்து கலைஞர் ஆகட்டும் இருவருமே இவ்விஷயத்தில் மெத்தனப்போக்கையே கையாண்டு வருகின்றனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக