புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சிறைவாசிகளின் விடுதலைக்காக சென்னையில் பொதுக்கூட்டம்

1 செப்டம்பர், 2012



சென்னை: இன அழிப்புக்கு எதிராக இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சார்பில் சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் மாலை 7 மணியளவில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் சமுதாய தலைவர்கள் பலர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

முஸ்லிம் சிறைவாசிகளின் விடுதலைக்காக பெரும்பாலான இஸ்லாமிய இயக்கங்கள் தொடந்து போராடி வருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் செப்டம்பர் மாதம் அண்ணா பிறந்த நாளையொட்டி நன்நடத்தையின் அடிப்படையில் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்வது வழக்கம்.

இந்திய அரசியலை பொருத்தவரை இருவகையான சட்டங்கள் நடைமுறையில் உள்ளன. அவை எழுதப்படாத சட்டம் மற்றும் பின்பற்றப்படக்கூடிய சட்டம். பெரும்பாலான சமயங்களில் முஸ்லிம்களுக்கு மட்டும் எழுதப்படாத சட்டமே நடைமுறைப்படுத்தப்படும். ஒவ்வொரு வருடமும் அண்ணா பிறந்த நாளையொட்டி ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் தமிழக அரசு முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டுவருகிறது. தற்போது ஆட்சி செய்து கொண்டிருக்கும் ஜெயா அராசாகட்டும் இதற்கு முன்னர் ஆட்சியில் இருந்து கலைஞர் ஆகட்டும் இருவருமே இவ்விஷயத்தில் மெத்தனப்போக்கையே கையாண்டு வருகின்றனர்.

இவ்வருடம் முஸ்லிம் ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி அனைத்து இன அழிப்பிற்கு எதிராக இஸ்லாமிய இளைஞர் இயக்கம் சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில தலைவர் கே.கே.எஸ்.எம் தெஹ்லான் பாகவி, இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் தலைவர் எஸ்.எம். பாக்கர், தமுமுகவின் ஹினீஃபா, தடா அப்துர்ரஹீம், உமர் கையான், எஸ்.டி.பி.ஐயின் வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா, தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுஸைன் ஆகியோர் கலந்து கொண்டனர்.


0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010