சென்னை: முஸ்லிம்களின் முன்னேற்றத்திற்கும், வலிமை அடைவதற்கும் பொருளாதாரம் மற்றும் கல்வி ரீதியில் முன்னேறுவதற்கு தனி இடஒதுக்கீடு அவசியமான ஒன்றாக இருக்கிறது. இந்த இடஒதுக்கீட்டினை பெற வேண்டுமென்றால் இது தொடர்பான விழிப்புணர்வை முஸ்லிம் சமூக மக்களிடத்தில் கொண்டு சேர்க்க வேண்டும் என்றடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு கோணங்களில் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறது.
சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ அதிக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதியாகும். இங்கு இடஒதுக்கீட்டிற்கான விழிப்புணர்வு பிரச்சார நாடகம் நடைபெற்றது. ஏராளமான பொதுமக்களுக்கு இந்நாடகம் மூலம் முஸ்லிம் சமூகத்தின் அவல நிலையை அறிந்து கொள்ள முடிந்தது.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக