புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

சென்னையில் நாளை அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம்

20 ஜூன், 2012


சென்னை: சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ)யின் 4ஆம் ஆண்டு துவக்கத்தை முன்னிட்டு சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் மற்றும் நலதிட்ட உதவிகள் வழங்கு விழா நடைபெற இருக்கிறது.

கடந்த 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் 21ஆம் தேதி அன்று ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காக எஸ்.டி.பி.ஐ என்ற அரசியல் பேரியக்கம் உருவெடுத்தது. தொடங்கப்பட்டு சில வருடங்களிலேயே இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் பரவி சிறுபான்மை மக்களிடையே அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றது.


தமிழகத்திலும் பல்வேறு இடங்களில் மக்கள் பிரச்சனைகளை கையில் எடுத்து சிறந்த சேவையினை செயலாற்றி வருகிறது எஸ்.டி.பி.ஐ. கடந்த சட்டமன்ற தேர்தலிலும், உள்ளாட்சி தேர்தலிலும் எந்தக்கட்சியுடனும் கூட்டணி இல்லாமல் தனித்தே போட்டியிட்டது. தான் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் கணிசமான வாக்குகளை பெற்றுள்ளது எஸ்.டி.பி.ஐ.

நாளை (ஜூன் 21) 4ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் எஸ்.டி.பி.ஐ சார்பாக சென்னை மண்ணடி தம்புச்செட்டி தெருவில் வடசென்னை மாவட்டம் சார்பாக மாபெரும் அரசியல் எழுச்சி பொதுக்கூட்டம் மற்றும் நல திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற இருக்கிறது. இந்நிகழ்ச்சிக்கு மாநில தலைவர் தெஹ்லான் பாகவி, பொதுச்செயலாளர் முஹம்மது ரஃபீக் மற்றும் வடசென்னை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.

இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக, ஏழை எளிய குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள், கல்வி உதவித்தொகை, தையல் இயந்திரம், மாற்றுத் திறனாளிகளுக்கான 3 சக்கர வண்டி வழங்குதல் போன்ற சேவைகள் நடைபெற இருக்கிறது. என வடசென்னை மாவட்ட தலைவர் எஸ். அமீர் ஹம்ஜா தெரிவித்துள்ளார்.

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010