![]() |
ஷஹீத் முஹம்மது ஃபஜல் |
தற்போது சி.பி.ஐ அதிகாரிகளிடம் இவ்வழக்கு ஒப்படைக்கபட்ட நிலையில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்பட்டு கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
இவ்வழக்கின் குற்றப்பத்திரிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த சி.பி.ஐ அதிகாரிகள் சி.பி.ஐ.எம்-ன் கிரிமினல் அஜண்டாவை குறித்தும் தகவல்களை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. கேரள மாநிலத்தில் வகுப்பவாத செயல்களில் அதிக அளவில் சி.பி.ஐ.எம் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர் என்ற தகவல்களை சி.பி.ஐ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து சி.பி.ஐ.எம்-ன் கோர முகத்தை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அடிப்படையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த ஒரு மாத காலமாக தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டது. இப்பிரச்சாரத்தின் இறுதியாக வருகின்ற ஜுன் 29 தளச்சேரியில் மக்கள் எதிர்ப்பு சக்தி என்ற ரீதியில் ஓர் நிகழ்ச்சியை நடத்த இருக்கின்றது.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம். ஷரீஃப் மற்றும் கேரள மாநில தலைவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். மக்களை பாதுகாக்க பாப்புலர் ஃப்ரண்டின் உறுப்பினர்கள் இந்நிகழ்ச்சியின் போது உறுதி மொழி எடுத்துகொள்ள இருக்கின்றனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக