புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

இலங்கை அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் பங்கேற்பு!

10 ஜூலை, 2012

சென்னை: அனைத்து மத தமிழ் மன்றங்கள் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில் கலந்து கொண்டார்.


சமீப காலமாக இலங்கையில் புத்த பிட்சுகள் வன்முறையை கையாண்டு வருகின்றனர். சமீப காலமாக பிறரது மத ஸ்தலங்களை சேதப்படுத்தி வரும் புத்த பிட்சுகளை இலங்கை அரசு கண்டு கொள்வதில்லை. சமீபத்தில் தம்புள்ளையில் மஸ்ஜிதை சேதப்படுத்தியதை தொடர்ந்து இந்து மத கோயில்களையும், கிறிஸ்தவ கோயில்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றனர். ஆனால் நடவடிக்கை எடுக்க வேண்டிய இலங்கை அரசு வன்முறையில் ஈடுபட்ட புத்த பிட்சுகள் மீது எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் மெளனம் சாதித்து வருகிறது.

இதனை கண்டித்து சென்னையில் இன்று (10.07.2012) "அனைத்து மத தமிழ் மக்கள் மன்றம்" சார்பாக மெமோரியல் ஹால் முன்பு மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இம்மன்றத்தில் அங்கம் வகிக்கும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக  மாநில துணைத்தலைவர் முஹம்மது இஸ்மாயில் கலந்து கொண்டார்.



0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010