புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான உதவி - பாப்புலர் ஃப்ரண்ட்

10 ஜூலை, 2012

தஞ்சை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக சமூகத்தை மேபடுத்தக்கூடிய பல பணிகளை நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் வலிமைப்படுத்த வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணித்து வரும் பாப்புலர் ஃப்ரண்ட் சமூக முன்னேற்றத்திற்காக பல் வேறு நல திட்ட உதவிகளை மேற்கொண்டு வருகிறது.



பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டிருக்கும் ஏழை குழந்தைகள் கல்வி கற்றிடவும், இடையிலேயே கல்வியை தொடர முடியாமல் விட்டுவிட்ட குழந்தைகளை கண்டறிந்து மீண்டும் அவர்களை பள்ளியில் சேர்த்துவிடுவது போன்ற‌ கல்வி தொடர்பான உதவிகளையும் மேற்கொண்டு வருகிறது. அது போன்று சிறுபான்மை சமூகத்தின் முன்னேற்றத்திற்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் எண்ணற்ற நலதிட்டங்களை வகுத்துள்ளது. ஆனால் இது தொடர்பான விழிப்புணர்வு இல்லாமல் இருக்கும் முஸ்லிம் சமூகத்திற்கு இந்த திட்டங்கள் சென்றடையாமல் போய்விடுகிறது.

அரசாங்கத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணபங்களை மக்களுக்கு பூர்த்தி செய்து, உரிய ஆவணங்களை இணைத்து அரசிடம் ஒப்படைக்கும் பணியை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டிணத்தில் மேற்கொண்டது. இதில் எண்ணற்ற மாணவ மாணவிகள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.



0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010