Você está em: Home
»
குண்டு வெடிப்புகள்
» ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் குண்டுவெடிப்பு!
மாஹி: பண்டக்கலிலுள்ள ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் தற்செயலாக
குண்டுவெடித்ததில் ஆர்.எஸ்.எஸ் பயங்கரவாதிகள் இருவர் படுகாயமுற்று வேலூர்
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குனியல் ஜிஷான் (22) மற்றும்
ஜித்து (22) ஆகிய ஆர்.எஸ். எஸ் பயங்கரவாதிகள் இக்குண்டுவெடிப்பில்
காயமுற்றனர். வெடிகுண்டு தயாரித்துக்கொண்டிருக்கும் போது வெடித்திருகலாம்
என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். குண்டு தயாரிக்க
உபயோகப்படுத்தப்படும் பொருட்கள் சிலவற்றை காவல்துறையினர் அங்கிருந்து
கண்டெடுத்துள்ளனர்.
ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் அருகே
செயல்பட்டுக்கொண்டிருந்த மதரஸா ஒன்றிற்கும் தொடர்ந்து இந்துத்துவா
அமைப்புகள் மிரட்டல் விட்டுவந்துள்ளதால் கடந்த செவ்வாய்கிழமை அன்று மதரஸா
மூடியிருந்ததாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக நேர்மையாகவும்,
உண்மையாகவும் நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பது அப்பகுதி மக்களின்
வேண்டுகோளாக இருக்கின்றது.
1 விமர்சனங்கள்:
this matter will not come out .......... because they r real patriot people......
கருத்துரையிடுக