
இந்நிலையில் டெல்லியில் நிகழ்ந்தது போலவே இந்தியாவின் எல்லை மாநிலங்களிலும், பழங்குடியினர் வாழும் பகுதிகளிலும் ராணுவம், போலீஸ் மற்றும் பாதுகாப்பு படையினரால் கூட்டு பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழுவதையும் குறிப்பிட வேண்டியுள்ளது. இங்கெல்லாம் பாதிக்கப்பட்டவர்களுக்கு, அவர்களுடைய உறவினர்களுக்கும் நீதி கிடைப்பதில்லை. மேலும் குற்றவாளிகல் தண்டிக்கப்படவும் இல்லை.
ஆனால் டெல்லி சம்பவத்தில் இந்திய மக்கள் தங்களது எதிர்ப்பையும், வேதனையையும் பேச்சிலும், எழுத்திலும் மட்டும் ஒதுக்கிவிடாமல் வீதிக்கு வந்து நீதிக்காக போராடுவது நல்லதொரு அறிகுறியாகும். நீதிக்கான இந்த உணர்வு, இந்த ஒரு சம்பவத்துடன் மட்டும் சுருங்கிவிடக்கூடாது. அனைத்து மனிதர்களுக்கும் அவர்கல் எந்த மதம், சாதியை சார்ந்தவர்களாக இருந்தாலும் தங்களது அடையாளத்தையும், கண்ணியத்தையும் பாதுக்காக்கும் உரிமை உண்டு என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும்.
குற்றவாளிக்கு கடுமையான தண்டனையை அளிக்கும் வகையில் புதிய சட்டம் இயற்றப்படவேண்டும் என்று இந்தியா முழுவதும் குரல்கள் ஒளிக்கின்றன. கே. முஹம்மது ஷரீஃப் இது குறித்து கூறுகையில், இது சட்டத்டின் குறைபாடு இல்லை. மாறாக, அதிகாரிகளின் மன உறுதியில் ஏற்பட்ட் வீழ்ச்சியே இச்சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற காரணமாகும். சட்டம் கடுமையாகப்படும் பொழுது அவை பரவலாக துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன என்பது நமது அனுபவமாகும்.
எதிர்காலத்தில் அனைத்து குற்றவாளிகளுக்கும் பாடமாகும் விதமாக டெல்லி பாலியல் வன்கொடுமை சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகல் மீது விரைவாக விசாரணையை நடத்துமாறு கே.எம். ஷரீஃப் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக