புதிய பாதை! புதிய இந்தியா!!

adv

சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!

10ஆம் வகுப்பு தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு பாப்புலர் ஃப்ரண்ட் வாழ்த்துகிறது

1 ஜூன், 2011

பத்தாம் வகுப்பு பொது தேர்வில் மேலப்பாளைய மாணவன் சதாம் உசேன் மாநில அளவில் 495  மதிப்பெண்கள் எடுத்து மாநிலத்தில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். மேலும் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார் .நெல்லை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இவரை பாராட்டி கேடயமும் ஊக்க தொகையும் வழங்கபட்டது .
வெற்றி பெற்ற மாணவருக்கு ஊக்கத்தொகை வழங்கும் நெல்லை மாவட்ட செயலாளர் ஹைதர் அலி
இந்த நிகழ்ச்சியில் பாப்புலர் ப்ரண்ட் நெல்லை மாவட்ட செயலாளர் A. ஹைதர் அலி அவர்கள் மாணவனுக்கு கல்வி உதவி தொகையும்  ஊக்க  பரிசும் வழங்கினார்.நெல்லை மாநகர தலைவர் மூஸல் காழிம்  அவர்களும்நெல்லை மாவட்ட அலுவலக செயலாளர் மைதீன்  அவர்களும் உடனிருந்தனர்.
சென்ற முறை பத்தாம் வகுப்பு பொது தேர்வில் நெல்லை மாவட்டம் சேர்ந்த டவுன் கல்லணை அரசு பள்ளியில் படித்த ஜாஸ்மின் என்ற முஸ்லிம் ஏழை மாணவி மாநிலத்தில் முதலிடம் பிடித்தார் .இந்த முறையும் மேலப்பாளையம் முஸ்லிம் மேல் நிலைப் பள்ளியில் (அரசு பள்ளி ) பயிலும் சதாம் உசேன் என்ற ஏழை முஸ்லிம் மாணவர் இரண்டாவது இடம் பிடித்துள்ளார் மென்மேலும் முஸ்லிம் மாணவர்கள் அனைத்து துறையிலும் முன்னேற பாப்புலர் ப்ரண்ட் வாழ்த்துகிறது.





 
நன்றி: நெல்லை பாப்புலர் ஃப்ரண்ட்

0 விமர்சனங்கள்:

கருத்துரையிடுக

 
சென்னை பாப்புலர் ஃப்ரண்ட் | by TNB ©2010