
சமீபத்தில் சிபிஐ அதிகாரிகள் என்.ஐ.ஏவிடம் அறிக்கை ஒன்றை சமர்பித்தனர். அதில் மாலேகானில் நடந்த குண்டுவெடிப்பிற்கு இந்துத்துவ இயக்கங்கள் தான் காரணம் என்றும், கைது செய்யப்பட்ட காவி பயங்கரவாதிகளை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்று கூறியுள்ளனர். சமீபத்தில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சுவாமி அசிமானந்தா மாலேகான் குண்டுவெடிப்பிற்கும் இந்துத்துவ அமைப்பிற்கும் தொடர்பு இருந்ததை ஒப்புக்கொண்டார்.
இதன் காரணமாக கைது செய்யப்பட்ட 9 அப்பாவி இளைஞர்களும் நிரபராதிகள் என அறிவிக்கப்பட்டனர். ஆனால் எந்த தவறும் செய்யாமல் ஐந்து ஆண்டு காலம் சிறை தண்டனை அனுபவித்து வந்திருக்கின்றனர். ஆனால் உண்மை குற்றவாளிகளான இந்துத்துவ தீவிரவாத இயக்கங்களை குண்டுவெடிப்பு நடைபெற்று 3 ஆண்டுகள் கழித்து தான் அவர்களுடைய பெயரையே இந்த வழக்கில் சேர்த்துள்ளனர்.
0 விமர்சனங்கள்:
கருத்துரையிடுக